சனி, 13 நவம்பர், 2021

போக்ஸ்சோ சட்டம்

 18 வயதிற்கு கீழ் இருக்கும்  குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? போக்ஸ்சோ சட்டம் சொல்வது என்ன?


போக்ஸ்சோ சட்டம்:


இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(pocso) Act 2012).


இந்த சட்டம் சுருக்கமாக போக்ஸ்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14 தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட நடைமுறைக்கு வந்தது.


இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.


சட்டத்தின் பொது அம்சங்கள்:


18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.


இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். 


இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.


மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.


குழந்தையின் நலனே பிரதானம்:


வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். 


அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, "பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். 

அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது."இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.


இதுவரை போக்ஸ்சோ சட்டத்தில், குற்றவியல் ஆவணக் காப்பகத் துறையின் தகவலின்படி 2016 ஆம் ஆண்டு 1567 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டு 1544 வழக்குகளும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளன.


பிரிவு 1: எல்லை:


1. இச்சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012(The protection of children from sexual offense(posco) Act 2012) என்று அழைக்கப்படுகிறது.


2. இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.


பிரிவு 2:


சில பதங்களின் வரையறை:


ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்(pentrative sexual assult):


ஒரு குழந்தையின் பெண்ணுறுப்புகளை பலவந்தமாக புண்ணாக்குதல், காயப்படுத்துதல், புணர்தல், உடல் உறவு கொள்ளுதல், கூர்மையான பொருட்களை பிறப்பு உறுப்பில் சொருகுதல் இதில் அடங்கும்.


இந்த குற்றத்திற்கு ஏழு வருடம் சிறை தண்டனை, அபராதம் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.


மோசமாக ஊடுருவக்ககூடிய பாலியல் தாக்குதல்( aggravated pentrative sexual assult):


ஒரு காவல் துறை அதிகாரி, பொதுத்துறை ஊழியர், ஆயுதப்படை உறுப்பினர் ஆகியோர் குழந்தையின் மீது பாலியல் தாக்குதல் செய்தல் அல்லது குழந்தையின் நெருங்கிய உறவினர் பாலியல் தாக்குதல் செய்தல் முதலிய குற்றத்திற்கு பத்து வருட சிறை விதிக்கப்படும்.


அத்தகைய பாலியல் தாக்குதல் விளைவாக குழந்தை இறந்து விடும் பச்சத்தில் இருபது வருடங்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.


மோசமாக பாலியல் தாக்குதல்(aggravated sexual assault) :


குழந்தைகளின் உடல் உறுப்புகளான மார்பு, ஆண்குறி, பிறப்பு உறுப்பு, பிற உறுப்புகளை ஆரம்ப கால பாலியல் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே தூண்டுதல், தீண்டுதல், காயம் விளைவித்தல் இதில் அடங்கும்.


குழந்தைகளை ஆபாச காட்சிகளுக்கு பயன்படுத்தல்(ponography purpose):


18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வலுக்கட்டாயமாக, குற்ற உணர்வு எதுவும் இன்றி எவர் ஒருவர், பிரித்தறிய முடியாத புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் அல்லது கணினி உருவாக்கிய படம் உள்ளிட்ட ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட பாலியல் வெளிப்படையான காட்சி சித்தரிப்புகளுக்கு பயன்படுத்துகிறாரோ அவர் இந்த சட்டத்தின் கீழ் தண்டனை பெறுவார்.


ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:

அதிகபட்சம்: 5 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: 5 ஆண்டுகள்


ஊடுருவக்கூடிய பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக:


குழந்தையைப் பயன்படுத்துதல்

குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள்

அதிகபட்சம்: ஆயுள் தண்டனை

குறைந்தபட்சம்: 10 ஆண்டுகள் (16 வயதுக்குக் குறைவான குழந்தையின் விஷயத்தில்:

அதிகபட்சம்: ஆயுள் தண்டனை


மோசமான ஊடுருவக்கூடிய பாலியல் தாக்குதலின் விளைவாக குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்:


அதிக பட்சம்: ஆயுள் தண்டனை

குறைந்தபட்சம்: 20 ஆண்டுகள்


அதிகபட்சம்: ஆயுள் தண்டனை, அல்லது மரணம்.

பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:

குறைந்தபட்சம்: ஆறு ஆண்டுகள்

அதிகபட்சம்: எட்டு ஆண்டுகள்

குறைந்தபட்சம்: மூன்று ஆண்டுகள்

அதிகபட்சம்: ஐந்து ஆண்டுகள்


மோசமான பாலியல் வன்கொடுமையின் விளைவாக ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துதல்:

குறைந்தபட்சம்: எட்டு ஆண்டுகள்

அதிகபட்சம்: 10 ஆண்டுகள்

குறைந்தபட்சம்: ஐந்து ஆண்டுகள்


அதிகபட்சம்: ஏழு ஆண்டுகள்

குறிப்பு: எந்தவொரு பாலியல் வன்கொடுமையும் விளைவிக்கும் ஆபாச நோக்கங்களுக்காக குழந்தையைப் பயன்படுத்துவதற்கான தண்டனை, குழந்தையை ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்த குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும்.


Use of child for pornographic purposes

· Maximum: 5 years

· Minimum: 5 years

Use of child for pornographic purposes resulting in penetrative sexual assault

· Minimum: 10 years


· Maximum: life imprisonment

· Minimum: 10 years (in case of child below 16 years: 20 years)


· Maximum: life imprisonment

Use of child for pornographic purposes resulting in aggravated penetrative sexual assault

· Life imprisonment

· Minimum: 20 years


· Maximum: life imprisonment, or death.

Use of child for pornographic purposes resulting in sexual assault

· Minimum: Six years


· Maximum: Eight years

· Minimum: Three years


· Maximum: Five years

Use of child for pornographic purposes resulting in aggravated sexual assault

· Minimum: Eight years


· Maximum: 10 years

· Minimum: Five years


· Maximum: Seven years

Note: Punishment for using child for pornographic purposes resulting in any form of sexual assault is in addition to minimum five years for use of child for pornographic propose...

சனி, 30 ஜனவரி, 2021

கியாரண்ட்டி என்றால் என்ன..?

 கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

The difference between warranty and guarantee
======================================================

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் ‘லாப்_டாப்’ தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு ‘சயன்டிஸ்ட்’ தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினாரில், ‘லாப்டாப்’ மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது. மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கிறார். உடனே, ‘லாப்_டாப் வாங்கிய நிறுவனத்தைக் கேட்டதில்’ அவர்கள் கூலாக, ‘நீங்கள் ‘லாப்_டாப்பை’ சரியாக ‘பிளக்கில்’ செருகவில்லை. அதனால் அது எங்கள் தவறு இல்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது’ என்று தட்டிக்கழித்துவிட்டார்கள். மேலும் வற்புறுத்தி, ‘கியாரண்ட்டி’ கொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றவுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்கவில்லை. வாரண்ட்டி என்றுதான் ‘கார்டு’ கொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்’ என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்_டாப்’ உபயோகமில்லாமல் போய்விட்டது. ‘கியாரண்ட்டி_வாரண்ட்டியை’ வைத்துக் கொண்டு எப்படி விளையாடிவிட்டார்கள் பாருங்கள்!
பொருட்களை விற்பனை செய்யும்போது, உபயோகிக்கும் முறையை விளக்க ‘இன்ஸ்ட்ரக்ஷன் மேனுவல்’ கொடுக்கிறார்கள். ஆனால் அதிலிருந்து நம்மால் எதுவும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மேலே சொன்ன ‘லாப்_டாப்’ விஷயம் போல் ‘மைக்ரோவேவ் அவன்’ பற்றிய ஒரு செய்தி. பெரும்பாலான ‘மைக்ரோ வேவ் அவன்’கள், 15 ஆம்பியர், கரண்டைத் தாங்கும் சுவிட்சுகளில்தான் வேலைசெய்யும். பல வீடுகளில் இந்த வசதி இருக்காது. இதனால், சிலர், ‘அவன் வேலை செய்யவில்லையென்று’ பதட்டப்படுவார்கள். வேறு சிலர், ஆர்வக் கோளாறு காரணமாக இயங்கவைக்க வேண்டுமென்று ஏதாவது செய்து, ‘மைக்ரோ_வேவ் அவனை’ ரிப்பேர் செய்துவிடுவார்கள். அப்படி ரிப்பேரானால், இந்த ‘கியாரண்ட்டி_வாரண்ட்டி’ வார்த்தைகளைப் போட்டு நம்மைக் குழப்பி, ஏமாற்றிவிடுவார்கள். ‘15 ஆம்ஸ் சுவிட்ச்’ இல்லாதவர்கள், ஒரு ‘சுவிட்ச் கன்வெர்டர்’ வாங்கி பிளக்கில் செருகினால், ‘அவன்’ வேலை செய்யும். இதை அவர்கள் எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் போடுவதில்லை.
நுகர்வோர் பாதிப்படையும்போது பாதிப்பு ஏற்படுத்தியது, அரசாங்கமாக இருந்தாலும்கூட நஷ்டஈடு கொடுக்க வேண்டும். ஒரு முறை, ‘டிமாண்ட் டிராஃப்ட்’ சாதாரண தபாலில் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. பெறுநர், அனுப்புனர் முகவரிகள் மிகச் சரியாக இருந்தும். அனுப்பியவருக்கே திரும்பி வந்துவிட்டது. போஸ்டல் டிபார்ட்மெண்டில் அனுப்புவரின் முகவரியை, பெறுபவரின் முகவரியைவிட பெரிதாக எழுதி இருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக, நுகர்வோர் நீதிமன்றத்தில், பதில் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் இந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்க்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டது. ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’

யார் நுகர்வோர்?
தனி ஒருவர் பொருள் வாங்கினால், நுகர்வோராகக் கருதப்பட்டு, அவருக்கான உரிமைகளை, நுகர்வோர் நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வுபெற முடியும். ஆனால் வாங்கும் பொருள் வியாபார நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால், நுகர்வோர் நீதி மன்றத்தில் தீர்வு பெற முடியாது.
Source: suvaasam 12/10/2017

வெள்ளி, 6 டிசம்பர், 2019

பந்தலூரில் தேசிய கல்வி நாளை முன்னிட்டு கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியன சார்பில்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் வரவேற்றார்.

பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன், கால்நடை மருத்துவர் பாலாஜி,  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் பேசும்போது 
நாம் கற்கும் கல்வி நமக்கு நமது சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

கல்வியில் இருந்து 
நேர்மை, விடமுயற்சி, தன்னம்பிக்கை, திறமை, தோல்விகளில் இருந்து அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நடைமுறைகள் ஆகியன கற்றுக்கொள்ள வேண்டும்.

எந்தப் பணி மேற் கொண்டாலும் அதை சிறப்பா செய்யனும், அரைகுறையாக செய்யக்கூடாது. சவால்களை கண்டு அஞ்சாமல் அவற்றை சரியான வழிமுறையில் எதிர்கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமே தவிர அதை நினைத்து வருத்தப்படக்கூடாது. 

நம்முடைய தகுதிகளை பார்த்தே வேலை வாய்ப்புகளை தருகிறார்கள். 

பேசுதல், சொல்லுவதை மனதில் பதிய வைத்தால், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் உட்பட
போட்டி சூழலில் இது போன்ற திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

இளைஞர்களின் வேலைவாய்ப்பு மேம்படுத்தும் விதமாக
ஸ்கில் இந்தியா என்கிற திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

வேலை தேடுவதை விட
வேலையை உருவாக்குபவர்களாக உருவாக அரசுகள் பல்வேறு பயிற்சிகள் வழங்குகிறது.

கல்வி கற்பதன் மூலம்
சுய வேலை வாய்ப்பு 
மற்றும் தொழில் முனைவோர்களாக இருக்க வேண்டும்.  

இதன்முலம் தன்னுடைய பொருளாதார மேம்பாட்டை உருவாக்கி கொள்ள வேண்டும்.

புரிந்து படித்தால் மூலமாக எளிதில் தேர்வுகளில் வெற்றி பெறமுடியும்.
 
புத்தகங்கள், பத்திரிக்கைகள் படியுங்கள், கேள்வி கேளுங்கள், நண்பர்களோடு நல்ல கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். 

சமூக திறன்கள்  வளர்த்துக் கொண்டு போட்டி நிறைந்த உலகில் வெற்றியாளராக உருவாக்க வேண்டும் என கூறினார். 

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான நூலக அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியர் சகோதரி செலின் நன்றி கூறினார்.

பள்ளி மாணவியர்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்,  அரசு வட்டார சுகாதார நிலையம்,  பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு, பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்,  ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர்  முனைவர்  கிருஷ்ணதாஸ்    தலைமை தாங்கினார் 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஷாலோம் சரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் விஜயன் சாமுவேல், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் முத்துசாமி வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் எனும் கொசுவால் பரவுகிறது.  

இது பகலில் மட்டும் கடிக்கும் சுமார் 500 மீட்டர் தூரம் பறக்கும் இந்த கொசு அந்த எல்லைக்குள் யாருக்கேனும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ள கொசு கடிக்கும்போது டெங்கு தாக்குகிறது.  

இதற்க்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  டெங்கு பாதிப்பு ஏற்பட்ட உடன் ரத்த உறையும் தன்மை இழந்து விடுகிறது.  

எனவே இரத்தம் கசியும் நிலை ஏற்படாமல் பார்த்து கொள்ளவும், ஓ ஆர் எஸ் கரைசல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.  

ஏடிஸ் கொசு சுத்தமான தண்ணீரில் உருவாகி வாழுவதால்,  வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுதல் வேண்டும்.  

ஏடிஸ் கொசு பகலில் கடிக்கும் எனவே பகலில் மாணவர்கள் அதிக நேரம் இருக்கும் பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.  

மாணவர்கள் தேர்வு செய்து சுகாதார காவலர்கள் அட்டை வழங்கப்படும்.  மாணவர்கள் தங்கள் குடியிருக்கும் பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பந்தலூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர் புவனேஷ்வரி பேசும்போது டெங்கு காய்ச்சல் வந்தால் இரத்த தட்டுகள் குறையும். அவற்றை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.  

காய்ச்சல் வந்தால் ஒரு நாளைக்கு 3 வேளை 50 மில்லி அளவில் குடிக்க வேண்டும்.  மாணவர்கள் 30 மில்லி குடிக்கலாம்.  காய்ச்சல் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை குடித்தால் போதும். 

 அரசு சித்தா பிரிவில் டெங்கு  பதித்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.  மாணவர்கள் மக்களிடம் டெங்கு காய்ச்சல் குணமாகும் முறைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் கோபு நன்றி கூறினார்

புதன், 18 செப்டம்பர், 2019

பொது குழு கூட்டம் 2019

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின்
பொது குழு கூட்டம்  2019 ஆகஸ்ட் 18 அன்று  பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு வந்தோரை  இணை செயலாளர் பொன். கனேசன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு தலைமை  தலைவர்  காளிமுத்து  தலைமை தாங்கினார்.   கடந்த 2018 / 19 ம் ஆண்டின்  செயல்பாடுகள், மற்றும்  எதிர்கால  செயல்பாடுகள் குறித்து  பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்.   வரவு செலவு அறிக்கையின் பொருளாளர் ஜெயசந்திரன் சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

நன்றி தெரிவித்தல்

            இதுநாள் வரை அமைப்பின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஆதரவு அளித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த  அரசு துறைகள் மற்றும் தொடர்ந்து அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தந்து உதவும் சமூக நல அமைப்புகள், நுகர்வோர் கூட்டமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைத்திற்கும் அமைப்பின் பொது குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமைப்பின் செயல்பாடு அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கைகள் எற்றுக்கொள்ளுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தீா்மாணங்கள்

1.      அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், புதிதாக நுகர்வோர் ஆர்வலர்களை உருவாக்குதல் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை உருவாக்குதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

2.      பள்ளி கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை வழிநடத்தி  நுகர்வோர் சுற்றுச்சூழல் மற்றும் இதர விழிப்புணர்வு பணிகளை மேற்க்கொள்ளுதல் மற்றும் நுகர்வோர் மன்றங்கள் அமைக்காத பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

3.      கல்வி வழிகாட்டலுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் நடத்தி சரியான கல்வி பெற வழிகாட்டுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

4.      இரத்த தான முகாம் நடத்துதல், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல் அதற்கான சுகாதார துறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

5.      உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி ஆதாரம் பெருக்குதல் என தீர்மாணிக்கப்பட்டது.





அரசு துறைகள் சார்பான   கோரிக்கைகள் சார்ந்த தீர்மாணங்கள்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

1.      நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாகவும், மழை அதிகம் பொழியும் மாவட்டமாகவும் உள்ளது.  இதனால் இங்கு அதிக அளவு எரிபொருள் தேவை உள்ளது.  இதனால் மலை மற்றும் மழை மாவட்டமான நீலகிரிக்கு கூடுதல் மண்ணென்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதந்தோறும் வழங்கும்  மண்ணென்னை  அளவு குறித்து தகவல்  முன்கூட்டி தெரியபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளல்.

2.      உணவு கலப்படம் மற்றும் கலாவதி உணவுகள் குறித்த முறையான ஆய்வுகளை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்வதில்லை.  இதனால் பல இடங்களில் காலாவதி உணவுகள் அதிகரித்து காணப்படுகின்றது.  இதுகுறித்து உணவு துறையினர் மூலம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டல்

3.      நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் முதல் சிறு குறு விவசாயிகள் ரேசன் அரிசியை மட்டுமே நம்பியுள்ளனர்.  இவர்களுக்கு கடைகளில் அரிசி வாங்கி பயன்படுத்தும் வழக்கம் மிகவும் குறைவே.  எனவே மாதந்தோறும் முழு அளவு அரிசி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதுடன் .  கூடலூர் பந்தலூர்  பகுதியில் அதிக அளவு பச்சரிசி பயன் படுத்துகின்றனர்.  எனவே  பச்சரிசி  ரேசன் கார்டுக்கு சுமார் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல கோதுமை அதிக அளவு தேவை படுகின்றது.  முன்பு ஒரு கிலோ கோதுமை ரூபாய் 7.50 வீதம் 5 கிலோ வரை வழங்கப்பட்டது.  பலரும் பயன் பெற்று வந்தனர்.  தற்போது அரிசிக்கு பதில் கோதுமை என்பதால் பலருக்கு அரிசியும் பற்றாக்குறை நிலவுகின்றது.  எனவே முன்பு போல் கோதுமை  தனியாக ஒரு கிலோ ரூபாய் 10/-வீதம் குறைந்தபட்சம் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

5.      ஸ்மார்ட் அட்டைகள் தொலைந்தவர்கள் புதிய அட்டை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் ரேசன் பொருட்கள் வாங்கவும் இயலாமல் அவதிப்படுகின்றனர்.  எனவே மாவட்ட அளவில்  தொலைந்த ஸ்மார்ட் கார்டிற்கு பதில் புதிய ஸ்மார்ட் கார்ட் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
6.           
7.      நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளதால் நுகர்வோர் சார்ந்த வழக்குகள் தேங்கி வருகின்றன.  இதனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டபடியான தீர்வு உரிய காலத்தில் பெற இயலாமல் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே காலியாக உள்ள தலைவர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.



சுகாதார துறை

1.      பந்தலூர் கூடலூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.  அதுபோல

2.      கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.  இதனால் பலரும் நோயினை கண்டிறிய முடியாமல் முற்றிய நிலையில் சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி இறந்து வருகின்றனர் என்பது வேதனையானது.

3.      எனவே கூடலூர் பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை பிரிவும், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் டயாலிசீஸ் பிரிவும் தொடங்கி செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல பந்தலூர் மற்றும் இரத்த பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் தற்போது காசநோய்  டெக்னீசியன் தான் அனைத்துவித இரத்த பரிசோதனை மேற்க்கொள்கிறார்கள்.  ஆனால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ரிப்போர்ட் கிடைப்பதில்லை.  இதனால் நோயாளிகள் பாதிக்கும் நிலையும் உள்ளது.  கூடலூர் அரசு மருத்துவமனையிலும் இரத்த வங்கி மற்றும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்வகை இரத்த மாதிரிகள் பரிசோதிக்க ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.  எனவே கூடுதல் இரத்த பரிசோதகர் கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.      எனவே பந்தலூர் அரசு மருத்துவமனையில்   அவசர  சிகிச்சை  மேற்க்கொள்ள தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடும்ப கட்டுபாட்டு அறுவை சிசிக்சை ஏற்கனவே மேற்கொண்டது போல் மாதம் இரு முறை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.      மாத்திரைகள் வழங்கும்போது மாத்திரைகளுக்கான சீட்டுகள் வழங்க வேண்டும்

7.      பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாய்மார்களுக்கு ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

8.      எக்ஸ்ரே இயந்திரம் நவீனமயமானதை வாங்கி கொடுத்து மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.      அவசர சிகிச்சைகளுக்கு இதர மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அக்குறைகளை நிவர்த்தி செய்து இங்கேயே தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






நெடுஞ்சாலை துறை சார்பான      கோரிக்கைகள்

பந்தலூரில் இருந்து கேரளா செல்லும் வகையில் கிளன்ராக்  வழியாக வனப்பகுதியில் சென்று கேரளா மாநிலம் முன்டேறி பகுதியில் இணையும் சாலை உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில இணைப்பு பகுதியாக உள்ளது.  இதில் கீழ்நாடுகானி பகுதியில் செல்லகூடிய தமிழ்நாடு கேரளா இணைப்பு சாலை சமீபத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக  சாலை பழுதடைந்து உள்ளது.  அடிக்கடி சாலை துண்டிக்கப்படுவதால்  மக்கள் போக்குவரத்துக்கு சிரம்ப்படும் நிலை உருவாகியுள்ளது. 

எனவே மாற்று நடவடிக்கையாக பந்தலூர் கிளன்ராக் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் முன்டேறி வழியாக செல்லும் சாலை தற்போது சிறிய நடைபாதையாக உள்ளது.  இந்த சாலையை அகலப்படுத்தி பெரிய வாகணங்கள் செல்லும் வகையில் தார்சாலையாக மாற்றி தந்தால் இருமாநில போக்குவரத்துக்கு உதவியாக அமையும்.  இந்த சாலை அமைக்க ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

எனவே மேற்படி சாலையை உருவாக்கி இருமாநில போக்குவரத்துக்கு  உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பந்தலூர் உப்பட்டி பொன்னானி வழியாக பாட்டவயல் செல்லும் சாலையில் ஏராளமான வாகணங்கள் வந்து செல்கின்றன.  இச்சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு உதவியாக அமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


சாலைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் சாலை சேதங்கள் ஏற்பட்டள்ளது.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று சாலைகள் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

பொது குழு கூட்டம் 2019

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின்
பொது குழு கூட்டம்  2019 ஆகஸ்ட் 18 அன்று  பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு வந்தோரை  இணை செயலாளர் பொன். கனேசன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு தலைமை  தலைவர்  காளிமுத்து  தலைமை தாங்கினார்.   கடந்த 2018 / 19 ம் ஆண்டின்  செயல்பாடுகள், மற்றும்  எதிர்கால  செயல்பாடுகள் குறித்து  பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்.   வரவு செலவு அறிக்கையின் பொருளாளர் ஜெயசந்திரன் சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

நன்றி தெரிவித்தல்

            இதுநாள் வரை அமைப்பின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஆதரவு அளித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த  அரசு துறைகள் மற்றும் தொடர்ந்து அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தந்து உதவும் சமூக நல அமைப்புகள், நுகர்வோர் கூட்டமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைத்திற்கும் அமைப்பின் பொது குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமைப்பின் செயல்பாடு அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கைகள் எற்றுக்கொள்ளுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தீா்மாணங்கள்

1.      அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், புதிதாக நுகர்வோர் ஆர்வலர்களை உருவாக்குதல் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை உருவாக்குதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

2.      பள்ளி கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை வழிநடத்தி  நுகர்வோர் சுற்றுச்சூழல் மற்றும் இதர விழிப்புணர்வு பணிகளை மேற்க்கொள்ளுதல் மற்றும் நுகர்வோர் மன்றங்கள் அமைக்காத பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

3.      கல்வி வழிகாட்டலுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் நடத்தி சரியான கல்வி பெற வழிகாட்டுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

4.      இரத்த தான முகாம் நடத்துதல், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல் அதற்கான சுகாதார துறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

5.      உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி ஆதாரம் பெருக்குதல் என தீர்மாணிக்கப்பட்டது.





அரசு துறைகள் சார்பான   கோரிக்கைகள் சார்ந்த தீர்மாணங்கள்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

1.      நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாகவும், மழை அதிகம் பொழியும் மாவட்டமாகவும் உள்ளது.  இதனால் இங்கு அதிக அளவு எரிபொருள் தேவை உள்ளது.  இதனால் மலை மற்றும் மழை மாவட்டமான நீலகிரிக்கு கூடுதல் மண்ணென்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதந்தோறும் வழங்கும்  மண்ணென்னை  அளவு குறித்து தகவல்  முன்கூட்டி தெரியபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளல்.

2.      உணவு கலப்படம் மற்றும் கலாவதி உணவுகள் குறித்த முறையான ஆய்வுகளை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்வதில்லை.  இதனால் பல இடங்களில் காலாவதி உணவுகள் அதிகரித்து காணப்படுகின்றது.  இதுகுறித்து உணவு துறையினர் மூலம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டல்

3.      நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் முதல் சிறு குறு விவசாயிகள் ரேசன் அரிசியை மட்டுமே நம்பியுள்ளனர்.  இவர்களுக்கு கடைகளில் அரிசி வாங்கி பயன்படுத்தும் வழக்கம் மிகவும் குறைவே.  எனவே மாதந்தோறும் முழு அளவு அரிசி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதுடன் .  கூடலூர் பந்தலூர்  பகுதியில் அதிக அளவு பச்சரிசி பயன் படுத்துகின்றனர்.  எனவே  பச்சரிசி  ரேசன் கார்டுக்கு சுமார் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல கோதுமை அதிக அளவு தேவை படுகின்றது.  முன்பு ஒரு கிலோ கோதுமை ரூபாய் 7.50 வீதம் 5 கிலோ வரை வழங்கப்பட்டது.  பலரும் பயன் பெற்று வந்தனர்.  தற்போது அரிசிக்கு பதில் கோதுமை என்பதால் பலருக்கு அரிசியும் பற்றாக்குறை நிலவுகின்றது.  எனவே முன்பு போல் கோதுமை  தனியாக ஒரு கிலோ ரூபாய் 10/-வீதம் குறைந்தபட்சம் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

5.      ஸ்மார்ட் அட்டைகள் தொலைந்தவர்கள் புதிய அட்டை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் ரேசன் பொருட்கள் வாங்கவும் இயலாமல் அவதிப்படுகின்றனர்.  எனவே மாவட்ட அளவில்  தொலைந்த ஸ்மார்ட் கார்டிற்கு பதில் புதிய ஸ்மார்ட் கார்ட் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
6.           
7.      நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளதால் நுகர்வோர் சார்ந்த வழக்குகள் தேங்கி வருகின்றன.  இதனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டபடியான தீர்வு உரிய காலத்தில் பெற இயலாமல் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே காலியாக உள்ள தலைவர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.



சுகாதார துறை

1.      பந்தலூர் கூடலூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.  அதுபோல

2.      கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.  இதனால் பலரும் நோயினை கண்டிறிய முடியாமல் முற்றிய நிலையில் சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி இறந்து வருகின்றனர் என்பது வேதனையானது.

3.      எனவே கூடலூர் பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை பிரிவும், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் டயாலிசீஸ் பிரிவும் தொடங்கி செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல பந்தலூர் மற்றும் இரத்த பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் தற்போது காசநோய்  டெக்னீசியன் தான் அனைத்துவித இரத்த பரிசோதனை மேற்க்கொள்கிறார்கள்.  ஆனால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ரிப்போர்ட் கிடைப்பதில்லை.  இதனால் நோயாளிகள் பாதிக்கும் நிலையும் உள்ளது.  கூடலூர் அரசு மருத்துவமனையிலும் இரத்த வங்கி மற்றும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்வகை இரத்த மாதிரிகள் பரிசோதிக்க ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.  எனவே கூடுதல் இரத்த பரிசோதகர் கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.      எனவே பந்தலூர் அரசு மருத்துவமனையில்   அவசர  சிகிச்சை  மேற்க்கொள்ள தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடும்ப கட்டுபாட்டு அறுவை சிசிக்சை ஏற்கனவே மேற்கொண்டது போல் மாதம் இரு முறை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.      மாத்திரைகள் வழங்கும்போது மாத்திரைகளுக்கான சீட்டுகள் வழங்க வேண்டும்

7.      பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாய்மார்களுக்கு ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

8.      எக்ஸ்ரே இயந்திரம் நவீனமயமானதை வாங்கி கொடுத்து மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.      அவசர சிகிச்சைகளுக்கு இதர மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அக்குறைகளை நிவர்த்தி செய்து இங்கேயே தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






நெடுஞ்சாலை துறை சார்பான      கோரிக்கைகள்

பந்தலூரில் இருந்து கேரளா செல்லும் வகையில் கிளன்ராக்  வழியாக வனப்பகுதியில் சென்று கேரளா மாநிலம் முன்டேறி பகுதியில் இணையும் சாலை உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில இணைப்பு பகுதியாக உள்ளது.  இதில் கீழ்நாடுகானி பகுதியில் செல்லகூடிய தமிழ்நாடு கேரளா இணைப்பு சாலை சமீபத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக  சாலை பழுதடைந்து உள்ளது.  அடிக்கடி சாலை துண்டிக்கப்படுவதால்  மக்கள் போக்குவரத்துக்கு சிரம்ப்படும் நிலை உருவாகியுள்ளது. 

எனவே மாற்று நடவடிக்கையாக பந்தலூர் கிளன்ராக் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் முன்டேறி வழியாக செல்லும் சாலை தற்போது சிறிய நடைபாதையாக உள்ளது.  இந்த சாலையை அகலப்படுத்தி பெரிய வாகணங்கள் செல்லும் வகையில் தார்சாலையாக மாற்றி தந்தால் இருமாநில போக்குவரத்துக்கு உதவியாக அமையும்.  இந்த சாலை அமைக்க ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

எனவே மேற்படி சாலையை உருவாக்கி இருமாநில போக்குவரத்துக்கு  உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பந்தலூர் உப்பட்டி பொன்னானி வழியாக பாட்டவயல் செல்லும் சாலையில் ஏராளமான வாகணங்கள் வந்து செல்கின்றன.  இச்சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு உதவியாக அமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


சாலைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் சாலை சேதங்கள் ஏற்பட்டள்ளது.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று சாலைகள் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

பொது குழு கூட்டம் 2019

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின்
பொது குழு கூட்டம்  2019 ஆகஸ்ட் 18 அன்று  பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு வந்தோரை  இணை செயலாளர் பொன். கனேசன் வரவேற்றார்.
கூட்டத்திற்கு தலைமை  தலைவர்  காளிமுத்து  தலைமை தாங்கினார்.   கடந்த 2018 / 19 ம் ஆண்டின்  செயல்பாடுகள், மற்றும்  எதிர்கால  செயல்பாடுகள் குறித்து  பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்.   வரவு செலவு அறிக்கையின் பொருளாளர் ஜெயசந்திரன் சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்

நன்றி தெரிவித்தல்

            இதுநாள் வரை அமைப்பின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ஆதரவு அளித்து பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்த  அரசு துறைகள் மற்றும் தொடர்ந்து அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தந்து உதவும் சமூக நல அமைப்புகள், நுகர்வோர் கூட்டமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனைத்திற்கும் அமைப்பின் பொது குழு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அமைப்பின் செயல்பாடு அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கைகள் எற்றுக்கொள்ளுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தீா்மாணங்கள்

1.      அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், புதிதாக நுகர்வோர் ஆர்வலர்களை உருவாக்குதல் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை உருவாக்குதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

2.      பள்ளி கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை வழிநடத்தி  நுகர்வோர் சுற்றுச்சூழல் மற்றும் இதர விழிப்புணர்வு பணிகளை மேற்க்கொள்ளுதல் மற்றும் நுகர்வோர் மன்றங்கள் அமைக்காத பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

3.      கல்வி வழிகாட்டலுக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் நடத்தி சரியான கல்வி பெற வழிகாட்டுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

4.      இரத்த தான முகாம் நடத்துதல், இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல் அதற்கான சுகாதார துறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுதல் என தீர்மாணிக்கப்பட்டது.

5.      உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி ஆதாரம் பெருக்குதல் என தீர்மாணிக்கப்பட்டது.





அரசு துறைகள் சார்பான   கோரிக்கைகள் சார்ந்த தீர்மாணங்கள்

உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

1.      நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாகவும், மழை அதிகம் பொழியும் மாவட்டமாகவும் உள்ளது.  இதனால் இங்கு அதிக அளவு எரிபொருள் தேவை உள்ளது.  இதனால் மலை மற்றும் மழை மாவட்டமான நீலகிரிக்கு கூடுதல் மண்ணென்னை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாதந்தோறும் வழங்கும்  மண்ணென்னை  அளவு குறித்து தகவல்  முன்கூட்டி தெரியபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளல்.

2.      உணவு கலப்படம் மற்றும் கலாவதி உணவுகள் குறித்த முறையான ஆய்வுகளை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொள்வதில்லை.  இதனால் பல இடங்களில் காலாவதி உணவுகள் அதிகரித்து காணப்படுகின்றது.  இதுகுறித்து உணவு துறையினர் மூலம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டல்

3.      நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளர்கள் முதல் சிறு குறு விவசாயிகள் ரேசன் அரிசியை மட்டுமே நம்பியுள்ளனர்.  இவர்களுக்கு கடைகளில் அரிசி வாங்கி பயன்படுத்தும் வழக்கம் மிகவும் குறைவே.  எனவே மாதந்தோறும் முழு அளவு அரிசி ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதுடன் .  கூடலூர் பந்தலூர்  பகுதியில் அதிக அளவு பச்சரிசி பயன் படுத்துகின்றனர்.  எனவே  பச்சரிசி  ரேசன் கார்டுக்கு சுமார் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல கோதுமை அதிக அளவு தேவை படுகின்றது.  முன்பு ஒரு கிலோ கோதுமை ரூபாய் 7.50 வீதம் 5 கிலோ வரை வழங்கப்பட்டது.  பலரும் பயன் பெற்று வந்தனர்.  தற்போது அரிசிக்கு பதில் கோதுமை என்பதால் பலருக்கு அரிசியும் பற்றாக்குறை நிலவுகின்றது.  எனவே முன்பு போல் கோதுமை  தனியாக ஒரு கிலோ ரூபாய் 10/-வீதம் குறைந்தபட்சம் 5 கிலோ வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

5.      ஸ்மார்ட் அட்டைகள் தொலைந்தவர்கள் புதிய அட்டை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இதனால் ரேசன் பொருட்கள் வாங்கவும் இயலாமல் அவதிப்படுகின்றனர்.  எனவே மாவட்ட அளவில்  தொலைந்த ஸ்மார்ட் கார்டிற்கு பதில் புதிய ஸ்மார்ட் கார்ட் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
6.           
7.      நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளதால் நுகர்வோர் சார்ந்த வழக்குகள் தேங்கி வருகின்றன.  இதனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டபடியான தீர்வு உரிய காலத்தில் பெற இயலாமல் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே காலியாக உள்ள தலைவர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.



சுகாதார துறை

1.      பந்தலூர் கூடலூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தமைக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.  அதுபோல

2.      கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது.  இதனால் பலரும் நோயினை கண்டிறிய முடியாமல் முற்றிய நிலையில் சிகிச்சை பெற இயலாமல் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி இறந்து வருகின்றனர் என்பது வேதனையானது.

3.      எனவே கூடலூர் பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை பிரிவும், சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் டயாலிசீஸ் பிரிவும் தொடங்கி செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

4.      அதுபோல பந்தலூர் மற்றும் இரத்த பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் தற்போது காசநோய்  டெக்னீசியன் தான் அனைத்துவித இரத்த பரிசோதனை மேற்க்கொள்கிறார்கள்.  ஆனால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ரிப்போர்ட் கிடைப்பதில்லை.  இதனால் நோயாளிகள் பாதிக்கும் நிலையும் உள்ளது.  கூடலூர் அரசு மருத்துவமனையிலும் இரத்த வங்கி மற்றும் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என பல்வகை இரத்த மாதிரிகள் பரிசோதிக்க ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார்.  எனவே கூடுதல் இரத்த பரிசோதகர் கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு மருத்துவமனையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.      எனவே பந்தலூர் அரசு மருத்துவமனையில்   அவசர  சிகிச்சை  மேற்க்கொள்ள தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குடும்ப கட்டுபாட்டு அறுவை சிசிக்சை ஏற்கனவே மேற்கொண்டது போல் மாதம் இரு முறை மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6.      மாத்திரைகள் வழங்கும்போது மாத்திரைகளுக்கான சீட்டுகள் வழங்க வேண்டும்

7.      பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தாய்மார்களுக்கு ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

8.      எக்ஸ்ரே இயந்திரம் நவீனமயமானதை வாங்கி கொடுத்து மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.      அவசர சிகிச்சைகளுக்கு இதர மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அக்குறைகளை நிவர்த்தி செய்து இங்கேயே தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10.  பந்தலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






நெடுஞ்சாலை துறை சார்பான      கோரிக்கைகள்

பந்தலூரில் இருந்து கேரளா செல்லும் வகையில் கிளன்ராக்  வழியாக வனப்பகுதியில் சென்று கேரளா மாநிலம் முன்டேறி பகுதியில் இணையும் சாலை உருவாக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில இணைப்பு பகுதியாக உள்ளது.  இதில் கீழ்நாடுகானி பகுதியில் செல்லகூடிய தமிழ்நாடு கேரளா இணைப்பு சாலை சமீபத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக  சாலை பழுதடைந்து உள்ளது.  அடிக்கடி சாலை துண்டிக்கப்படுவதால்  மக்கள் போக்குவரத்துக்கு சிரம்ப்படும் நிலை உருவாகியுள்ளது. 

எனவே மாற்று நடவடிக்கையாக பந்தலூர் கிளன்ராக் பகுதியில் இருந்து கேரளா மாநிலம் முன்டேறி வழியாக செல்லும் சாலை தற்போது சிறிய நடைபாதையாக உள்ளது.  இந்த சாலையை அகலப்படுத்தி பெரிய வாகணங்கள் செல்லும் வகையில் தார்சாலையாக மாற்றி தந்தால் இருமாநில போக்குவரத்துக்கு உதவியாக அமையும்.  இந்த சாலை அமைக்க ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

எனவே மேற்படி சாலையை உருவாக்கி இருமாநில போக்குவரத்துக்கு  உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பந்தலூர் உப்பட்டி பொன்னானி வழியாக பாட்டவயல் செல்லும் சாலையில் ஏராளமான வாகணங்கள் வந்து செல்கின்றன.  இச்சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு உதவியாக அமைத்து தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


சாலைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் சாலை சேதங்கள் ஏற்பட்டள்ளது.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று சாலைகள் உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.